Erumayil

music
carnatic
thiruppugazh
kalyani
arunagirinathar
publish

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே

 ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே

 குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே

 வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்

 ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.